உள்ளூர் செய்திகள்
வேலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்
வேலூர் மாவட்டத்தில் 1.30 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முதல்வர் செல்வி, நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது, வரும் ஞாயிற்றுக்கிழமை 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரத்து 345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் 934 முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து பணி மற்றும் வியாபார நிமித்தமாக வேலூர் மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர் கள், சாலை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள் ளவர்கள், பொம்மை விற்பனை யாளர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணியில் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட 3,548 பணியாளர்களும் மேற்பார்வையிட 116 பணியாளர்களும் ஏற்படுத்தப்பட உள்ளன.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான சொட்டு மருந்துகள் எடுத்துச் செல்லவும் வேலூர் மாவட்டம் முழுவதும் பிற துறை மற்றும் சுகாதாரத் துறை வாகனங்கள் உட்பட 56 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள், பேனர்கள், போஸ்டர்கள், அடையாள மை பேனாக்கள் மற்றும் முகாமிற்கு தேவையான அனைத்து பொருட்களும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் இருந்து பெறப்பட்டு முகாம் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே வழக்கமாக போடும் போலியோ சொட்டு மருந்து எத்தனை முறை போட்டிருந்தாலும் இம்முறையும் அவசியம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என பேசினார்.