உள்ளூர் செய்திகள்
செய்யாறு அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
செய்யாறு அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள புரிசை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 80). உடல் ஊனமுற்றவர்.
கடந்த 7 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பயிருக்கு அடிக்கப் பயன்படும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.