உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வெம்பாக்கம் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2022-02-24 13:25 IST   |   Update On 2022-02-24 13:25:00 IST
வெம்பாக்கம் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த சித்தன்ன கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி (வயது 60) விவசாயி.

இவருக்கு கவிதா என்ற மகளும், சிலம்பரசன் மற்றும் மணிகண்டன்  (25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கவிதாவுக்கும், சிலம்பரசனுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். 

மணிகண்டனுக்கு திருமணம் ஆகாததால் தனது தந்தையிடம் திருமணம் செய்து வைக்கக்கோரி கேட்டார். பூபதி 6 மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறினார்.

இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட மணிகண்டன் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் பயிருக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். 

அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News