உள்ளூர் செய்திகள்
வேட்டவலம் அருகே 2000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
வேட்டவலம் அருகே 2000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
வேட்டவலம்:
வேட்டவலம் மலை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் வேட்டவலம் எஸ்.ஐ ராமச்சந்திரன், தலைமையில் எஸ்.ஐ ராமகிருஷ்ணன், தலைமை காவலர் பார்த்திபன், தனிப்பிரிவு போலீசார் நேற்று அணுகுமுறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொன்னமேடு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் 8 பிளாஸ்டிக் பேரல்கள் மற்றும் பிளாஸ்டிக் குடம் கேன் ஆகியவற்றை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.
பின்னர் 2000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.