உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சீர்காழியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் திரில் வெற்றி

Published On 2022-02-23 15:45 IST   |   Update On 2022-02-23 15:45:00 IST
சீர்காழி 14-வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் திரில் வெற்றி பெற்றார்.
சீர்காழி:

சீர்காழி நகர்மன்ற தேர்தலில் 14-வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் அருணா, தி.மு.க வேட்பாளர் சிவபிரியா, நாம்தமிழர் கட்சி நித்யா, பா.ம.க மைவிழி, மக்கள் நீதி மய்யம் ரேகா, சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி ஆகிய 6 பேர் போட்டியிட்டனர். 

இதில் சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி 250 வாக்குகள் பெற்று 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தி.மு.க வேட்பாளர் சிவபிரியா 249 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

இந்த வார்டில் தபால் வாக்கு 1 செல்லாதவையாக நிராகரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. 

1 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளரை, சுயேட்சை வேட்பாளர் வென்றிருப்பது 14-வது வார்டில் சுவாரஸ்யமாக பேசப்படுகிறது.

Similar News