உள்ளூர் செய்திகள்
.

மண் கடத்திய டிப்பர் லாரி உள்பட 2 வாகனம் பறிமுதல்

Published On 2022-02-23 09:24 GMT   |   Update On 2022-02-23 09:24 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி உள்பட 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்துள்ள குட்லகொட்டாய் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக மல்லப்பாடி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது போலீசாரை கண்டதும் மண் திருடிய 4 பேர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். மண் கடத்திய ஒரு டிப்பர் லாரி, ஜே.சி.பி. ஆகிய 2 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மண் கடத்தியதாக அதே பகுதியை சேர்ந்த மாதப்பன் (வயது38), பழனி (31), ராஜா (36), செல்வராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News