உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாநகராட்சி வாக்குகள் 42 டேபிள்களில் எண்ணப்படுகிறது
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் பதிவான வாக்குகள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி.கல்லுரியில் எண்ணப்படுகிறது. அங்கு ஒரே நேரத்தில், 42 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் பதிவான வாக்குகள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி.கல்லு£ரியில் எண்ணப்படுகிறது. அங்கு ஒரே நேரத்தில், 42 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும்.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, கோபி, சத்தியமங்கலம், பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து, 14 இடங்களில் அமைக்கப்பட்ட ஓட்டு எண்ணும் மையத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் 70.73 வாக்கு சதவீதம் பதிவாகி இருந்தது. 42 பேரூராட்சிகளில் 79.42 சதவீதமும், 4 நகராட்சிகளில் 74.14 சதவீதமும், மாநகராட்சியில் 61.91 சதவீதமும் வாக்கு பதிவாகியுள்ளது.
ஈரோடு மாநகராட்சிக் கான ஓட்டு, சித்தோடு ஐ.ஆர்.டி.டி.கல்லு£ரியில் எண்ணப்படுகிறது. அங்கு ஒரே நேரத்தில், 42 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு மேஜைக்கும் தலா, ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் என இருவர் என, 84 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
பவானி நகராட்சி ஓட்டு எண்ணிக்கைக்கு, 4 மேஜைகளுக்கு, 8 பேர், கோபி நகராட்சிக்கு, 10 கையில் ஈடுபடுகின் றனர். இவை அனைத்தும் சேர்த்து மொத்தம், 111 மேஜைகளில், 222 அலுவலர்கள் மூலம் ஓட்டு எண்ணும் பணி நடக்க உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் 222 அலுவலர்களுக்கு அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.