உள்ளூர் செய்திகள்
வாக்கு எண்ணும் மையத்தில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு 14 வாக்கு எண்ணும் மையங்களில் தொடங் குகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு 14 வாக்கு எண்ணும் மையங்களில் தொடங் குகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:&
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் 14 மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டு 24 மணி நேரமும் காவல் துறையினர் மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நாளில் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். கண்டிப்பாக தீப்பெட்டி, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், புகையிலைப் பொருட்கள் போன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது. மீறி வைத்திருப்போரின் அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்படும்.
மது வகைகள் மற்றும் இதர குளிர்பானங்களுக்கு அனுமதி இல்லை. முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அரசியல் பேசுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டால் முகவர்களது அனுமதி ரத்து செய்யப்படும்.
வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளர்கள், முகவர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.