உள்ளூர் செய்திகள்
பவானியில் 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
பவானியில் 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானியில் 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி அடுத்த காளிங்கராயன்பாளையம் கவுந்தப்பாடி ரோட்டில் சலூன் கடை, சைக்கிள் கடை, மருந்து கடை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளை உரிமையாளர்கள் பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கடையை திறக்க அவர்கள் வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சலூன் கடை, சைக்கிள் கடை, மருந்து கடை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் கடை ஆகிய கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கடையை திறந்து பார்த்தனர். இதில் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து விசாரணை நடத் தினர்.
இதில் இரவு சிலர் அந்த பகுதியில் உள்ள 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளனர்.
இதில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போய் உள்ளதா? என ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கேயன், சித்தோடு இன்ஸ் பெக்டர் வடிவேல் முருகன் குமார் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ஒரு வாலிபர் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு சைக்கிளை தள்ளி கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.
இது குறித்து சித்தோடு போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.