உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமுறை இசை நிகழ்ச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்து வந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் காஞ்சிபுரம் நால்வர் நற்றமிழ் மன்றம் சார்பில் நேற்று மாலை திருமுறை மாத வழிபாடு நிகழ்ச்சி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப மண்டபம் அருகில் நடைபெற்றது.
இதில் இசைக்கலைஞர்கள் பங்கேற்று திருமுறை பாடல்களை மனமுருகப் பாடினர். மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.