உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,026 ஆக குறைந்தது

Published On 2022-02-20 15:33 IST   |   Update On 2022-02-20 15:33:00 IST
ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினரின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினரின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் கொரோனா 3-ம் அலை திடீரென தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. 

அதிலிருந்து 20 நாட்கள் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. 

பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

இதன் காரணமாக மாவட் டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பை விட குணமடைந் தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 378ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 167 பேர் குணமடைந் துள்ளனர். இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட் டத்தில் கொரோனாவால் இதுவரை 733 பேர் உயிரிழந்து உள்ளனர்.தற்போது மாவட்டம் முழுவதும் 1,026 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதால் பரிசோதனை எண்ணிக்கையும்  குறைக்கப் பட்டுள்ளது. 

தற்போது ஆயிரம் பேர் சிகிச்சையில் 85 சதவீதம் பேர் லேசான அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பொது மக்களில் பெரும் பாலானோர் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வருவது இல்லை. 

Similar News