உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் 5 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நியமன உத்தரவு

Published On 2022-02-18 15:09 IST   |   Update On 2022-02-18 15:09:00 IST
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் 5 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தபால் ஓட்டு மூலம் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் 5 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தபால் ஓட்டு மூலம் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு தலைமை தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர், 3 உதவி வாக்குச்சாவடி அலுவல ர்கள் என மொத்தம் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் ஈரோடு மாநகராட்சியில் 51&வது வார்டு, 42 பேரூராட்சிகளில் 20 வார்டுகளில் வேட்பா ளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் அந்த வார்டுகளில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது.

இதனால் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 கட்டமாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 1,221 வாக்குசாவடி மையங்கள் 95 மண்டலங் களில் அமைக்கப் பட் டுள்ளது. 

இதில் மண்டல அலுலவலர்கள், வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள், வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 

இந்நிலையில் வாக்குசாவடி மையங்களில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு இன்று காலை அந்தந்த பயிற்சி மையத்தில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. 

அந்த உத்தரவில் பணியாற்ற வேண்டிய உள்ளாட்சி அமைப்பின் பெயர், வாக்குசாவடி மையம் அமைந்துள்ள கிராமம் மற்றும் நகரம் பெயர், வாக்குசாவடி மைய எண் உள்ளிட்ட விபரங்களும், வாக்கு பதிவு பணி நிலை தகுதி விபரம் உள்ளிட்டவை குறிப்பிடப் பட்டிருந்தது.

வாக்குசாவடி பணி நியமனம் பெற்ற ஊழியர்கள் மதியத்திற்குள் அந்தந்த வாக்குசாவடிக்கு சென்றடைய வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர். 

மேலும் இன்று அலுவலர்களுக்கு அந்தந்த பயிற்சி மையத்திலேயே தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அலுவலர்கள் ஆர்வத்துடன் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். 

Similar News