உள்ளூர் செய்திகள்
தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:
தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி மரப்பம்பாளையம் பிரிவை சேர்ந்த கணேஷ் என்கிற கணேசமூர்த்தி (35) தச்சுத்தொழிலாளி. இவருக்கு சங்கீதா (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் கணேசமூர்த்தி சம்பவத் தன்று தனது தாயை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு கவுந்தப் பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற தனியார் பஸ் கவுந்தப்பாடி அய்யம் பாளையம் பிரிவு அருகே கணேசமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாரத விதமாக மோதியது.
இதில் கணேசமூர்த்தி தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தலேயே பலியானார்.
அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பஸ் முன்சக்கரத்தில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவுந்தப்பாடி போலீசார் பலியான கணேசமூர்த்தி உடலை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தாய் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து தனியார் பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். விபத்து காரணமாக கவுந்தப்பாடி&சத்தி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.