உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.30 லட்சம் பேர் குணமடைந்தனர்
ஈரோட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.30 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.30 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் திடீரென தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் 100 -க்கு கீழ் சென்றது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 198ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 217 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 027 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 51 வயது ஆண் மற்றும் 50 வயது ஆண் என இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்தது.
தற்போது மாவட்டம் முழுவதும் 1,437 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.