உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

Published On 2022-02-16 14:55 IST   |   Update On 2022-02-16 14:55:00 IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா  உருமாற்றம் அடைந்து  ஒமைக்ரான்  தொற்று வேகமாக பரவ தொடங்கியது. மேலும்  மீண்டும் கொரோனா  அதி கரிக்கத் தொடங்கியது.  

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி திரையரங்கு களில் 50 சதவீத பார்வை யாளர்களுக்கு  மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 12&ந் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறி விக்கப்பட்டது. அதன் படி இன்று முதல் திரையரங்கு களில் 100 சதவீத பார்வை யாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 37 திரையரங்கு கள் உள்ளன. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 11 திரையரங்குகள் உள்ளன. இன்று முதல் திரை யரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக் கப்பட்டு வருகின் றனர்.

இதேப்போல் உணவகத் திலும் இன்று முதல் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின் றனர். மேலும் மால்கள், வணிக நிறுவனங்களில் இன்று முதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தொடங்கியுள்ளது. இருப்பினும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறி முறைகளுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
திரையரங்குகளில் மாஸ்க் அணிந்து வருபவர் கள் மட்டுமே உள்ளே அனு மதிக்கப்பட்டு வருகின்றனர்.

Similar News