உள்ளூர் செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனத்திடம் அண்ணாமலை ஆசி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்து அருள் ஆசி பெற்றார்.
குத்தாலம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்து அருள் ஆசி பெற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அண்ணாமலை, மாலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தார்.
அப்போது இந்தியாவின் தொன்மை மிக்க ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்ற அண்ணாமலை, அங்கு திருவாவடுதுறை ஆதீனம்
24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருள் ஆசி பெற்றார்.
அவருக்கு குருமகா சன்னிதானம் நினைவு பரிசினை வழங்கினார். அப்போது கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.