உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மேலும் 1,325 பேருக்கு கொரோனா தொற்று- 14 பேர் உயிரிழப்பு

Published On 2022-02-15 16:01 GMT   |   Update On 2022-02-15 16:01 GMT
சென்னையில் நேற்று 341 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் இன்று 303 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தினசரி பாதிப்பை பொருத்தவரை கடந்த 9ம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றைய பாதிப்பு 1,634 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 39 ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் நேற்று 341 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 303 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 231 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும், ஈரோட்டில் 82 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவாகியிருக்கிறது.

இன்று ஒரே நாளில் 5,894 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 69ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,946 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31,368 ஆக குறைந்துள்ளது. 
Tags:    

Similar News