உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் 26.29 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26 லட்சத்து 29 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26 லட்சத்து 29 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-ம் அலை உச்சத்தின் போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1,700 வரை பதிவானது.
முன் களப்பணியாளர்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது.
இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர்.
இதன்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது.
2-ம் அலையின் போது பாதிப்பு அதிகரித்து வந்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தினசரி பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக் குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலேயோ, ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் விரைவாக குணம் அடைந்தார்.
இந்நிலையில் மாவட்ட த்தில் 3-ம் அலையில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வந்தது.
இதைத் தொடர்ந்து முதலில் 2 ஆயிரம் பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில் பின்னர் அது படிப்படியாக 4 ஆயிரமாக உயர்ந்தது. அதன் பின்னர் 6 ஆயிரமாக அதிகரித்தது.
இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 26 லட்சத்து 29 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது தினமும் 3500 முதல் 4 ஆயிரம் பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.