உள்ளூர் செய்திகள்
முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது.
தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரியில் போடப்பட்டு வருகிறது.
மேலும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.
மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதேபோல் 15 முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 25 ஆயிரத்து 595 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர்.
இது 89.86 சதவீதமாகும். இதேப்போல் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 12 லட்சத்து 44 ஆயிரத்து 236 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 68.78 சதவீதமாகும்.
முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியை மொத்தம் இதுவரை 28 லட்சத்து 69 ஆயிரத்து 831 பேர் செலுத்தி உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.