உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் தபால் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
நாகர்கோவிலில் தபால் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடிவீஸ்வரம் கல்மட தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது இவர் பணி நீக்கம் காரணமாக வீட்டில் இருந்து வந்தார்.
இதனால் கணேசன் மனமுடைந்து காணப் பட்டார். நேற்று இரவு வழக்கம் போல் கணேசன் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். இன்று காலை அவர் தூங்கிய அறையின் கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து அவரது மனைவி அறையின் கதவை திறந்து பார்த்தபோது கணேசன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கூச்சலிட்டார். இதையடுத்து உறவினர்கள் அங்கு வந்தனர்.
தூக்கில் தொங்கிய கணேசனை மீட்டனர். பின்னர் கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான கணேசனுக்கு ரம்யா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.