உள்ளூர் செய்திகள்
.

தெலங்கானா மாநிலத்தில் நடந்த போட்டியில் ஓசூரை சேர்ந்த பந்தயப் புறாக்கள் சாதனை

Published On 2022-02-14 15:18 IST   |   Update On 2022-02-14 15:18:00 IST
தெலங்கானா மாநிலத்தில் நடந்த போட்டியில் ஒசூரை சேர்ந்த பந்தயப்புறாக்கள் சாதனை செய்து முதல் 3 பரிசுகளை தட்டிச் சென்றன.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பொம்மாண்ட பள்ளியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(38), இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் கடந்த 9 ஆண்டுகளாக பந்தயப் புறாக்களை வளர்த்து, போட்டிகளில் கலந்து கொள்ள செய்துள்ளார். இவரது புறாக்கள்,  பல்வேறு போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் தெலங்கானா மாநிலம், அதிலாபாத்தில் நடந்த போட்டியில், சதீஷ்குமாரின் 9 புறாக்கள் கலந்துகொண்டன. அதில் 3 புறாக்கள், முதல் 3 பரிசுகளை தட்டிச்சென்றன. 

நேற்று முன்தினம் பந்தயம் தொடங்கி காலை 6.57 மணிக்கு புறாக்களை பறக்கவிட்ட நிலையில், அதிலாபாத் -ஓசூர் இடையேயான 800 கி.மீ.தொலைவை  முதல் புறா 13 மணி 48 நிமிடத்திலும், 2-வது புறா 14 மணி 463 நிமிடத்திலும், 3-வது புறா 15 மணி 34 நிமிடத்திலும் வான்வெளியில் பறந்து நேற்று காலை 8.42 மணியளவில் ஓசூர் வந்தடைந்தன.

Similar News