உள்ளூர் செய்திகள்
ஒண்ணுபுரம் கோவிலில் கிடைத்த பழமையான அம்மன் சிலை.

கோவிலில் பழமையான அம்மன் சிலை கண்டெப்பு

Published On 2022-02-14 15:09 IST   |   Update On 2022-02-14 15:09:00 IST
ஒண்ணுபுரம் கோவிலில் பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் பழமையான கச்சபேஸ்வரர் கோவில் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. 

இக்கோவில் வளாகத்தில் நவக்கிரக மற்றும் பைரவர் கோயில் கட்ட நேற்று காலை அஸ்திவாரம் தோண்டப்பட்டது.அப்போது பூமிக்கடியில் பழமையான அம்மன் சிலை சிதிலமடைந்து நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலையை சுத்தம் செய்து அதே இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். 

இச்சிலை அப்பகுதி பக்தர்கள் சிலர் கூறுகையில், கச்சபேஸ்வரர் கோவில் கட்டும் இடத்தில் கண்டெடுத்த சிலை பழமையானதா? என்பது உரிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவேண்டும். 

தற்போது இச்சிலையின் இடுப்பு, பாதம் ஆகிய இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இச்சிலை சேதமடைந்து உள்ளதால் வழிபாடு இன்றி பூமிக்கடியில் புதைந்திருக்கலாம் என்றனர்.

Similar News