உள்ளூர் செய்திகள்
போலீசார் கொடி அணிவகுப்பு

வைத்தீஸ்வரன் கோவிலில் போலீசார் கொடி அணிவகுப்பு

Published On 2022-02-14 15:04 IST   |   Update On 2022-02-14 15:04:00 IST
உள்ளாட்சி தேர்தலையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்கு வருகிற 19ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் போலீசார் மற்றும் கமான்டோ படையினரின் கொடி அணிவகுப்பு வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. 

சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு வைத்தீஸ்வரன் கோவில் பேருந்துநிலையத்தில் இருந்து தொடங்கி மேல வீதி, கீழவீதி, சன்னதி தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக போலீசாரின் கொடி அணிவகுப்பு வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் முடிவடைந்தது.

தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சீர்காழி கோட்டத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் இருந்து காவல்துறை அதிகாரிகள் சிறப்பு காவல் படையினர், கமாண்டோ படையினர், காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பில் பங்குபெற்றனர்.

Similar News