உள்ளூர் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்ததாக என்ஜினீயர் மீது புகார்
சிறுமியை திருமணம் செய்ததாக என்ஜினீயர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடந்தது. இதில் மணப்பெண்ணுக்கு 17 வயது என்ற தகவல் திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி யோகம்மாளுக்கு கிடைத்தது.
இதுதொடர்பாக அவர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஹேமமாலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சிறுமியை திருமணம் செய் தது திருப்பரங்குன்றம் கள்ளர் தெருவை சேர்ந்த பிரசாந்த் (வயது 27) என்பது தெரியவந்தது. என்ஜினீயரான அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதுதொடர்பாக பிரசாந்த், அவரது தந்தை குருசாமி, தாய் பாப்பா, திருப்பரங்குன்றம் ராமானுஜர் நகர் செல்லப்பாண்டி மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகிய 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.