உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் சிறுவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Published On 2022-02-12 15:19 IST   |   Update On 2022-02-12 15:19:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் சிறுவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் சிறுவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதையடுத்து 12 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. 

இதில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில்  தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 

ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  

இதுவரை மொத்தம் 83 ஆயிரத்து 053 சிறுவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசியான கோவேக்சின் போடப்பட்டு வந்தது.

இந்நிலையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்த மாணவ-மாணவிகளுக்கு தற்போது 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 598 சிறுவர்களுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News