உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

டி.என்.பாளையம் அருகே நாயை தூக்கி சென்ற சிறுத்தை

Published On 2022-02-11 15:07 IST   |   Update On 2022-02-11 15:07:00 IST
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கம்பனூர் காலனி பகுதியில் மாரிச்சாமி என்பவர் வீட்டில் வளர்த்து வந்த நாயை கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுத்தை கடித்து தூக்கி சென்றது.
டி.என்.பாளையம்: 

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கம்பனூர் காலனி பகுதியில் மாரிச்சாமி என்பவர் வீட்டில் வளர்த்து வந்த நாயை கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுத்தை கடித்து தூக்கி சென்றது.
 
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

இதை அடுத்து வனத்துறையினர் நேரில் சென்று கால் தடங்களை ஆய்வு செய்து நாயை தூக்கி சென்றது சிறுத்தை தான் என உறுதி செய்தனர்.

இதனால் வனப்பகுதியில் பொதுமக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடை களை மேய்க்க செல் வதை தவிர்ப்பதோடு, வனத் தையொட்டி வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்று டி.என்.பாளையம் வனத்துறை சார்பில் அறி வுறுத்தப்பட்டது.

மேலும் சிறுத்தை நடமாட்டத்தை தெர்மல் கேமரா மூலம் இரவு நேரங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தெர்மல் கேமிரா மூலம் சுமார் 200 மீட்டர் வரை வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்ள முடியும். 

இரவு நேரங்களில் மட்டுமே இந்த தெர்மல் கேமரா கண்காணிப்பு முறையை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள முடியும் என்று டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தெரிவித்தார்.

Similar News