உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகம் திறப்பு

Published On 2022-02-10 15:29 IST   |   Update On 2022-02-10 15:29:00 IST
புதுச்சேரி விக்னபுரம் கிராமத்தில் கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்த மத்திய மண்டல ஐ.ஜி நாகை மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் முக்கிய இடங்களில் நூலகத்தினை தொடங்க உத்தரவிட்டதின் அடிப்படையில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி வழிகாட்டுதலின் படி 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுச்சேரி விக்னபுரம் கிராமத்தில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்படி, உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நூலகத்தினை திறந்து வைத்தார்.

இந்த நூலகத்தில் மாணவர் களின் எதிர்காலத்திற்கும், இளைஞர்களின் வாழ்க்கையினை நெறிமுறைபடுத்தும் வகையிலும், இல்லத் தரசிகளின் பொழுதினை இனிமையாக்கும் வகையிலும், சிறுவர்களின் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையிலும், 

முதியவர்களின் பொழுதினை பயனுள்ளதாக மாற்றும் வகையில் புராண கதைகளும், போட்டித் தேர்விற்கு தயராகும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தலைவர் களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் வாழ்க்கை முறை கோட்பாடுகள் மற்றும் பொது அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய நூல்களும் உள்ளன. இதனை பொது மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Similar News