உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சொத்து தகராறில் சகோதரர்களிடையே மோதல்

Published On 2022-02-10 15:08 IST   |   Update On 2022-02-10 15:08:00 IST
வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் சகோதரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன்கள் அஞ்சப்பன் (65), சுரேஷ் (30). இவர்களுக்குள் பூ£¢வீக சொத்து சம்மந்தமாக பிரச்சினை இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சுரேஷ் பிரச்சினைக்குரிய இடத்தில் வேலி அமைப்பதற்காக சென்றபோது அஞ்சப்பன் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் மண்வெட்டி, கட்டையால் தாக்கிக் கொண்டனராம்.

 இதுகுறித்து அஞ்சப்பன் கொடுத்த புகாரில் சுரேஷ், வேலுசாமி, வேலுசாமி மனைவி ஜோதி ஆகிய மூவர் மீதும், சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சப்பன், அஞ்சப்பன் மனைவி இளவரசி, வெங்கடேஷ் ஆகியோர் மீது தனித்தனியே வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதில் காயமடைந்த இருதரப்பையும் சேர்ந்த சுரேஷ், அஞ்சப்பன், 
அஞ்சப்பன் மனைவி இளவரசி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News