உள்ளூர் செய்திகள்
போளூரில் பைக் மீது லாரி மோதி சுகாதார ஆய்வாளர் பலி
போளூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக இறந்தார்.
போளூர்:
போளூர் காதர்பாட்சா பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 23) ஆரணி அருகே உள்ள குண்ணத்தூரில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று பணி முடித்து தனது பைக்கில் போளூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது போளூர் - வேலூர் சாலையில் பாக்மார்க் பேட்டை என்ற இடத்தில் வந்தபோது எதிர் திசையில் வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக இவர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் ஜெயசூர்யா தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் நிற்காமல் சென்று விட்டார். சம்பவ இடத்திற்க விரைந்து வந்த போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து ஜெயலுசூர்யாவின் தாயார் விஜயா போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் சப்&இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.