உள்ளூர் செய்திகள்
போராட்டம்

பண்ருட்டியில் இன்று ரேசன் கடைகளை பூட்டி ஊழியர்கள் போராட்டம்

Published On 2022-02-08 16:15 IST   |   Update On 2022-02-08 16:15:00 IST
பண்ருட்டி வட்டத்தில் பணிபுரியும் அனைத்து ரேசன் கடை பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து உடனடியாக அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி போராட்டம் செய்தனர்.

பண்ருட்டி:

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 31 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைகடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று (8-ந்தேதி) இந்த போராட்டம் நடந்தது. பண்ருட்டி வட்டத்தில் பணிபுரியும் அனைத்து ரேசன் கடை பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து உடனடியாக அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி போராட்டம் செய்தனர்.

பண்ருட்டி பகுதியில் உள்ள200-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் மூடப்பட்டு இருந்தது.

Similar News