உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோட்டில் வீடு, வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். வெளியூரில் இருப்பவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ஈரோடு:
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோட்டில் வீடு, வீடாக சென்று க்கும் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். வெளியூரில் இருப்பவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தந்த வார்டுக்கான தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பா.ஜ.க மற்றும் சுயேட்சை வேட்ப £ளர்கள் பிட் நோட்டீஸ்கள் அச்சிட்டு, 3 முதல் 5 பேருடன் தெருத்தெருவாக சென்று, வாக்காளர் பட்டியல்படி வீடுகளில் வாக்கு சேகரிக்கின்றனர்.
முதற்கட்டமாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வாக்காளர்கள், அவர்கள் தற்போது இங்குள் ளார்களா? வெளியூரில் இருந்தால் தேர்தல் தேர்தல் அன்று வருவார்களா?, அவர்களது போன் எண், வேறு வார்டில் அவர்கள் வசிப்பவராக இருந்தால், அங்குள்ள விலாசம், போன் எண் போன்றவற்றை பெறுகின்றனர்.
சென்று பார்க்கும் து£ரத்தில் இருந்தால், அவர்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்க ஆட்களை அனுப்புகின்றனர். போனில் அழைக்கும் தொலைவில் இருந்தால், உடனடியாக போனில் ‘கேன்வாஸ்’ செய்கின்றனர். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றதும், அங்குள்ள வாக்காள ர்களுக்கு பழக்கமானவர்கள் மூலம் அவர்கள் என்ன கட்சி ஆதரவாளர்கள், அல்லது பொதுவானவரா என்ற விபரத்தையும் குறிக்கின்றனர்.
தாங்கள் சார்ந்த கட்சிக்காரராக இருந்தால், அவர்களை கட்சியினர் மூலம் அணுகவும், பொது வானவராக இருந்தால், அவர்களிடம் அடுத்த சுற்றில் பிரசாரத்துக்கு வரும்போது பேசி ஆதரவு கோரும்படி திட்டமிட்டு செல்கின்றனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில் புது முகங்கள், ஆண் நிர்வாகிக்கு பதில் அவரது மனைவி, தாயார் போன்றோர் நிறுத்தப்பட்டுள்ளதால், வாக்காளர்களிடம் அவர்களை அறிமுகம் செய்யும் நிலை உள்ளது.
இருப்பினும் பேரூராட்சி வார்டுகளில் 680 முதல் 1,800 ஓட்டும், நகராட்சி வார்டுகளில் 1,200 முதல் 2,600 ஓட்டும், மாநகராட்சியில் 6,500 முதல் 9,600 ஓட்டும் உள்ளதால் தங்களது கட்சி ஆதரவாளர்கள், பொதுவானவர்கள், எதிர் கட்சியை ஆதரிப்பவர்கள் என 3-ஆக பட்டியலிட்டு, அடுத்த கட்ட பிரசாரத்துக்கு தயார்படுத்தி வருகின்றனர்.