உள்ளூர் செய்திகள்
தீயனைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி

சென்னிமலை வனப்பகுதியில் 5 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்தது

Published On 2022-02-07 14:40 IST   |   Update On 2022-02-07 14:40:00 IST
புகை பிடித்து விட்டு அணைக்காமல் வீசியதால் சென்னிமலை வனப்பகுதியில் 5 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சேதமானது.
சென்னிமலை:

புகை பிடித்து விட்டு அணைக்காமல் வீசியதால் சென்னிமலை வனப்பகுதியில் 5 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சேதமானது.

சென்னிமலை மலை வனப்பகுதி 1,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த அடர்ந்த வனப்பகுதியில்  மரம், செடி, கொடிகள் வளர்ந்து காட்சி அளித்து வருகிறது. மேலும் இங்கு ஒரு சில இடங்களில் செடி, கொடிகள் காய்ந்து கிடக் கிறது.

இந்த நிலையில் சென்னிமலை- காங்கேயம் மெயின் ரோடு, பசுவபட்டி பிரிவு திருவள்ளுவர் நகர் பகுதியினை ஓட்டி உள்ள வனப்பகுதியில் காய்ந்து கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது. 

தொடர்ந்து தீ மளமள வென எரிய தொடங்கியது. இதில் 5 ஏக்கருக்கு மேல் தீபற்றி எரிந்தது.

இது குறித்து சென்னி மலை தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று அங்கு இருந்த மரக்கிளைஇ தழை களை கொண்டு அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். 

மேலும் வனப்பகுதியினை யொட்டி திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் இருக்க வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அதன் பின்பு தான் திருவள் ளுவர் நகர் பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். 

தீ விபத்து எப்படி நடந்தது என வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ரோட்டில் சென்ற  ஒருவர் சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் வீசி இருக் காலம் என தெரிய வந்தது.

Similar News