உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

வாலிபரிடம் பணம்-செல்போன் பறிப்பு

Published On 2022-02-06 14:25 IST   |   Update On 2022-02-06 14:25:00 IST
பெருந்துறை அருகே வட மாநில வாலிபரிடம் அந்த வழியாக காரில் வந்த 4 பேர் பணம் மற்றும் செல்போன் பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே வட மாநில வாலிபரிடம் அந்த வழியாக காரில் வந்த 4 பேர் பணம் மற்றும் செல்போன் பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.

மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டம் ரூப்மேரி பகுதியை சேர்ந்தவர் பர்சன் பர்மன் (வயது 21). இவர் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு தனது அம்மாவிற்கு பணம் அனுப்புவதற்காக பெருந்துறை பணிக்கம்பாளையம் ரோட்டிலுள்ள ஒரு ஏ.டி.எம். டெபாசிட் மிஷினில் பணம் போடுவ தற்காக ரூ.5 ஆயிரம் எடுத்து கொண்டு அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி காரில் இருந்த 4 பேர் கீழே இறங்கி பர்சன் பர்மனை பிடித்து அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பிடுங்கி கொண்டு அங்கிருந்து காரில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.

உடனடியாக பர்சன் பர்மன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Similar News