உள்ளூர் செய்திகள் (District)
மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சென்னை மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். போலீஸ்காரரான இவர் மெரினாவில் ரோந்து வாகன டிரைவராக பணி\புரிந்து வருகிறார்.
திருமணமாகி மனைவி தேன்மொழி மற்றும் 10 வயது மகள், 6 வயது மகன் ஆகியோருடன் வசித்து வரும் ஜெயச்சந்திரனுக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார்.
கடந்த மாதம் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஜெயச்சந்திரன், மனைவி தேன்மொழியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனம் உடைந்த தேன்மொழி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்தார்.
இதைப்பார்த்து காவலர் ஜெயச்சந்திரன் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தேன்மொழிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். போலீஸ்காரரான இவர் மெரினாவில் ரோந்து வாகன டிரைவராக பணி\புரிந்து வருகிறார்.
திருமணமாகி மனைவி தேன்மொழி மற்றும் 10 வயது மகள், 6 வயது மகன் ஆகியோருடன் வசித்து வரும் ஜெயச்சந்திரனுக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார்.
கடந்த மாதம் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஜெயச்சந்திரன், மனைவி தேன்மொழியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனம் உடைந்த தேன்மொழி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்தார்.
இதைப்பார்த்து காவலர் ஜெயச்சந்திரன் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தேன்மொழிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.