உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படை முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்த முடிவு

Published On 2022-01-31 14:49 IST   |   Update On 2022-01-31 14:49:00 IST
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படை, முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படை, முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளுக்கு வரும் 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 

ஈரோடு மாநகர் பகுதியில் 6 இடங்கள், அந்தந்த நகராட்சி அலுவலகங்கள், அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.  வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இந்நிலையில் இனிவரும் நாட்களில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுதல் பிரச்சார பாதுகாப்பு பணி ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களுக்கு கொண்டு செல்வது, ஓட்டு எண்ணும் இடங்களுக்கு ஓட்டுப்பெட்டிகளை கொண்டு செல்வது, ஓட்டு எண்ணும் மையப் பாதுகாப்பு என பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். 

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது போலீசார் வேட்பு மனு தாக்கல் செய்யப் படும் பகுதிகள், பறக்கும் படை, 14 வாகன சோதனை இடங்களில் பணி யாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 1,834 போலீசார் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு,  மருத்துவ விடுப்பு உட்பட பல்வேறு காரணங் களால் 350 போலீசார் விடுப்பில் உள்ளனர். மீதமுள்ள போலீசாரைக் கொண்டு தேர்தல் பாது காப்பு வழக்கமான பணி இருந்து இரவு நேர பாதுகாப்பு, கண்காணிப்பு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு போலீஸ் என்றாலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மேலும் போலீசார் தேவைப்படுகின்றனர். இதையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினர்,  முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் ஆகியோரை  ஈடுப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Similar News