உள்ளூர் செய்திகள்
தொடர் மழையால் பசுமையாக காட்சி அளிக்கும் திம்பம் வனப்பகுதி
தொடர் மழையால் திம்பம் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.
சத்தியமங்கலம்:
தொடர் மழையால் திம்பம் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இந்த புலிகள் காப்பகம் பண்ணாரி முதல் புளிஞ்சூர் வரை அடர்ந்த வனப்பகுதிகள் கொண்டது.
வனப்பகுதியின் மத்தியில் திம்பம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு புலி, கரடி, சிறுத்தை, மான் மற்றும் யானைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இந்த மலைப்பாதை வழியாக தினமும் சத்திய மங்கலம், ஈரோடு, உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கார், வேன், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் என ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
மேலும் கர்நாடகாவுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளதால் இந்த வழியாக எப்போதும் வாகன போக்கு வரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் திம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசு மையாக காட்சி அளிக் கிறது. வனப்பகுதிகளில் காய்ந்து கிடந்த மரம், செடி கொடிகள் தொடர் மழை காரணமாக துளிர்ந்து பச்சை பசேலென காட்சி அளிக்கிறது.
மேலும் அதிகாலை நேரத்தில் வனப்பகுதிகளில் பனி பொழிவு இருந்து வருகிறது. இதனால் பனி படர்ந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. வனப்பகுதிகளில் சீதோஷன நிலை நிலவுவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இதை கண்டு ரசித்தப்படி சென்று வருகிறார்கள்.