உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோட்டில் ஒரே நாளில் 1,314 பேருக்கு தொற்று

Published On 2022-01-28 15:04 IST   |   Update On 2022-01-28 15:04:00 IST
ஈரோட்டில் ஒரே நாளில் 1,314 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்புடன் 8 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோட்டில் ஒரே நாளில் 1,314 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்புடன் 8 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 7&ந் தேதி முதல் தினசரி பாதிப்பு 100&ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 1,314 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 15 பேருக்கு கூடுதலாகும்.

இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 437 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் 898 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 578 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 722 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 8,137 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Similar News