உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமல்- அரசியல் கட்சி பேனர்களை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்

Published On 2022-01-27 16:00 IST   |   Update On 2022-01-27 16:00:00 IST
தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்காக நாளை (28-ந்தேதி) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் போட்டியிடுபவர்கள் மாநகராட்சி மைய அலுவலகம், வீரப்பன் சத்திரம் அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

மாநகராட்சி 3-வது மண்டலத்துக்குட்பட்ட மீனாட்சிசுந்தரம் சாலை, ஜி.எச்.ரவுண்டானா, ஈ.வி.என்.ரோடு, சூரம்பட்டி நால்ரோடு, ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு ஆகிய பகுதிகளில் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் அரசியல் கட்சியினர் சுவரொட்டிகளை அப்புறப்படுத்தினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

தேர்தல் தொடர்பான விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சியினருக்கும் விளக்கும் வகையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்தும், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும் விளக்கப்படும். அதன் பின்னர் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றனர்.

Similar News