உள்ளூர் செய்திகள்
மரத்தின் மீது வேன் மோதி 4 பேர் காயம்
மரத்தின் மீது வேன் மோதி 4 பேர் காயம் அடைந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் தர்மர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 40). இவரது மனைவி சுந்தரி (34). இவர்களது உறவினரான முத்துக்குமார் மனைவி மங்கையர்க்கரசி (54).மகாலிங்கம் மகன் அருண்குமார் (4) ஆகியோர் அறந்தாங்கியிலிருந்து ஒரு வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை மாதவன் ஓட்டினார்.
குளமங்கலம் தெற்கு கிராமத்தில் வேன் வந்து கொண்டிருந்த போது, எதிர் பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்¬க்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.