உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் கொரோனா பாதிப்பு குறைகிறது

Published On 2022-01-24 10:06 GMT   |   Update On 2022-01-24 10:06 GMT
வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
வேலூர்:

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வந்த கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இன்று 161 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 55,619 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 52,525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் இது வரை 1,154 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போதைய நிலவரப்படி 1,943 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கொரோனா குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 52,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 49,054 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 782 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நிலவரப்படி 2,523 பேர் சிகிச்சை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு 750 - ஆக இருந்த தினசரி பாதிப்பு தற்போது கணிசமாக குறைந் துள்ளதால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 2,398 பேர் - வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 370 பேருக்கு கொரோனா உறுதியாகி யுள்ளது. இதில், 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப் படி அரசு தனியார் மருத்துவமனைகள், சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தில் 1,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளதால் சுகாதாரத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.

இருப்பினும் நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின் பற்ற வேண்டும். பொது இடங் களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ள காய்ச்சல் அறிகுறி இருந்தால் சிகிச்சை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News