உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விபத்தில் முதியவர் பலி

Published On 2022-01-24 09:59 GMT   |   Update On 2022-01-24 09:59 GMT
வேலூர் சேண்பாக்கத்தில் விபத்தில் முதியவர் பலியானார்.
வேலூர்:

காட்பாடி விருதம்பட்டை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 67). ராணிப்பேட்டையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வக பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் சேண்பாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். 

சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நீச்சல்குளம் எதிரே வந்த போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த அன்பழகனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News