உள்ளூர் செய்திகள்
வேலூர் கிரீன் சர்க்கிள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது

Published On 2022-01-23 08:18 GMT   |   Update On 2022-01-23 08:18 GMT
வேலூரில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது. இதனால் ரெயில் நிலையத்திலிருந்து ஆட்டோ கார்கள் இயக்கப்படவில்லை.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வேலூர் மாநகர பகுதியில் பால் மெடிக்கல் ஆஸ்பத்திரிகள் தவிர வேறு எதுவும் திறக்கப்படவில்லை. 

வேலூர் அண்ணா சாலை, காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு, ஆரணி ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. காட்பாடி காந்திநகர் மற்றும் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, விஐடி சாலை பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்டத்தின் புறநகர் பகுதியான குடியாத்தம், பேரணாம்பட்டு, ஒடுகத்தூர், அணைக்கட்டு, கே. வி குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க மாநில, மாவட்ட எல்லைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வருவபவர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை
வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் கோழி ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டன. இதனை அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

ரெயிலில் வரும் பயணிகளுக்கு வசதியாக ஆட்டோ மற்றும் கார் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதன்படி காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து பயணிகள் வசதிக்காக ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் இயக்கப்பட்டன.

ஆந்திரவிலிருந்து வரும் வாகனங்கள் மாநில எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் தடுத்து நிறுத்தப்பட்டது.  இதனால் வாகனங்களில் வந்தவர்கள் அவதிப்பட்டனர்.
 
எல்லையிலிருந்து காட்பாடி வரை பயணிகள் சிலர் நடந்து வந்தனர்.
Tags:    

Similar News