உள்ளூர் செய்திகள்
சிதம்பரம் அருகே கார் டிரைவர் தற்கொலை
சிதம்பரம் அருகே கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலை நகர்:
சிதம்பரம் அருகே உள்ள மேலகுண்டலப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பாண்டியன் (வயது 23). இவர் வாடகை கார் டிரைவர். நேற்று முன்தினம் இவர் வாடகை கார் ஓட்டி விட்டு, புதுச்சேரியில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் அதே பகுதியில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சென்ற அவர் யாரும் எதிர்பாராத வகையில் அங்குள்ள அறையில் வேட்டியால் தூக்கு போட்டுக்கொண்டார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த, குடும்பத்தினர், அருள்பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அருள்பாண்டியன் இறந்து விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள மேலகுண்டலப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பாண்டியன் (வயது 23). இவர் வாடகை கார் டிரைவர். நேற்று முன்தினம் இவர் வாடகை கார் ஓட்டி விட்டு, புதுச்சேரியில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் அதே பகுதியில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சென்ற அவர் யாரும் எதிர்பாராத வகையில் அங்குள்ள அறையில் வேட்டியால் தூக்கு போட்டுக்கொண்டார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த, குடும்பத்தினர், அருள்பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அருள்பாண்டியன் இறந்து விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.