உள்ளூர் செய்திகள்
வெளிமாநில பயணிகள் எண்ணிக்கை குறைந்தது
வேலூருக்கு வரும் வெளிமாநில பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் ஆட்டோ டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம் தங்கக் கோவில் ஆகியவற்றை பார்வையிடவும் பல்வேறு வெளி மாவட்ட, மாநிலங்கள், வெளிநா டுகளைச் சேர்ந்த ஏராளமானோர் நாள்தோறும் வேலூருக்கு வந்து செல்கின்றனர்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வேலூர் வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைக்காக 13,000 ஆட்டோக்களும், 6,000 கார்களும் இயக்கப்படுகின்றன.
வேலூர் மாநகரில் மட்டும் சுமார் 4,000 ஆட்டோக்களும், 2,000 கார்களும் இயங்குகின்றன. அதிக எண்ணிக்கையில் கார், ஆட்டோ டிரைவர்களைக் கொண்ட நகரங்களில் வேலூர் முக்கிய இடம்பிடித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தொற்று பரவல் 2020 - ம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலூர் மாவட்ட ஆட்டோ, கார் வாடகை தொழில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த சில மாதங்களா கத்தான் ஆட்டோ, கார் வாடகைத் தொழில் மீண்டும் புத்துயிர் பெற்று நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்த்திட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட் டுள்ளன.
இதன் காரணமாக பல்வேறு வெளி மாவட்டங்கள், மாநிலங்க ளில் இருந்து வேலூருக்கும், வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
ஏற்கெனவே வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரெயில் பயணிகள் எண்ணிக்கையும் சரிந்து வருவதால் வாடகை ஆட்டோ, கார்களுக்கு சவாரிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, சவாரி பிடிப் பதற்காக காட்பாடி ரெயில்நிலையம் முன் ஆட்டோ டிரைவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.