உள்ளூர் செய்திகள்
நடுரோட்டில் கவிழ்ந்து கிடக்கும் கலவை எந்திரம்.

சத்தியமங்கலம் அருகே கலவை வாகனம் கவிழ்ந்து 3 பேர் பலி

Published On 2022-01-22 08:24 GMT   |   Update On 2022-01-22 08:24 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று கலவை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது நஞ்சப்பகவுண்டன் புதூர். இந்த பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக கலவை ஏற்றிக் கொண்டு ஒரு வாகனம் நஞ்சப்பகவுண்டன்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கலவை வாகனத்தை தேனியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த வாகனத்தில் பவானிசாகர் காராட்சிகோரை என்ற பகுதியை சேர்ந்த முத்தப்பன், கொத்துக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.

கலவை வாகனம் சத்தியமங்கலம்-நெகமம் பிரிவு என்ற பகுதியில் குறுகலான சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கலவை வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்தானது.

இதில் கலவை வாகனத்தில் பயணித்த 3 பேரும் சிக்கி அலறினார்கள். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கலவை வாகனத்தில் வந்த டிரைவர் கருப்புசாமி மற்றும் தொழிலாளர்கள் முத்தப்பன், சரவணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News