உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3119 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2022-01-19 07:01 GMT   |   Update On 2022-01-19 07:01 GMT
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஈரோடு 19:


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.


பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 1லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அதேநேரம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 104 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

இந்தநிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்தமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இன்றுஅதிகாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.94 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3119 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடியும் என மொத்தம் 3100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News