உள்ளூர் செய்திகள்
ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளிசந்தை வெறிச்சோடியது.

இரவுநேர ஊரடங்கால் ஈரோடு ஜவுளிசந்தை வியாபாரம் பாதிப்பு

Published On 2022-01-18 13:57 IST   |   Update On 2022-01-18 13:57:00 IST
இரவுநேர ஊரடங்கு காரணமாக ஈரோடு ஜவுளி சந்தையில் இன்று வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஈரோடு:

இரவுநேர ஊரடங்கு காரணமாக ஈரோடு ஜவுளி சந்தையில் இன்று வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம்பார்க்கில் ஜவுளிசந்தை இயங்கி வருகிறது. இங்கு தினசரி கடைகளும், வாரசந்தையும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெரும். 

இந்த வாரசந்தையில் மகாராஷ்டிரா ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். 

இங்கு சாதாரணநாட்களை விட விசேஷ நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று ஜவுளிசந்தை கூடியது. இரவுநேர ஊரடங்கு மற்றும் தைப்பூசம் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. 

இதனால் மொத்த வியாபாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்று வெறும் 5 சதவீதம் அளவுக்கு மட்டுமே மொத்த வியாபாரம் நடைபெற்றது. 

இதைப்போல் உள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் கடந்த வாரத்தை விட குறைவாகவே நடைபெற்றது.

Similar News