உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோபி நகராட்சி பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு

Published On 2022-01-18 12:22 IST   |   Update On 2022-01-18 12:22:00 IST
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோபி நகராட்சி பொதுபிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  கோபி நகராட்சி பொதுபிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் தலைவர் பதவி, ஆண், பெண், பொது மற்றும் ஜாதிய சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஈரோடு மாநகராட்சி பொது - பெண்ணுக்கும், சத்தியமங்கலம் மற்றும் பவானி ஆகிய நகராட்சிகள் பொது -பெண்ணுக்கும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி எஸ்.சி., -பொது என ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் உள்ள கோபி நகராட்சி இதுவரை பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு  இருந்ததால், வரும் தேர்தலில் பொதுவாக மாற்றப்பட்டுள்ளது. இதில், ஆண், பெண் என யாரும் போட்டியிடலாம்.

அதுபோல, இம்மாவட்டத்தில் உள்ள, 42 பேரூராட்சியில், கிளாம்பாடி பேரூராட்சி எஸ்.சி., பெண் என ஒதுக்கீடு செய்துள்ளனர்.

மேலும், பாசூர், கூகலு£ர், அவல்பூந்துறை, வெங்கம்பூர், கொடுமுடி, காஞ்சிகோவில், காசிபாளையம் - கோபி, எலத்தூர், சிவகிரி, நசியனு£ர், அரியப்பம்பாளையம், பெத்தாம்பாளையம், சென்னிமலை, மொடக்குறிச்சி, நல்லாம்பட்டி, வடுகப்பட்டி, சித்தோடு, பள்ளபாளையம், அத்தாணி, லக்கம்பட்டி, ஆப்பக்கூடல் என, 21 பேரூராட்சிகள் பொது - பெண் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மற்றவை பொது என்ற பட்டியலில் இடம் பெறும். இதனால் ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Similar News