உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-01-16 08:07 GMT   |   Update On 2022-01-16 08:07 GMT
வாலாஜா அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜா:

வாலாஜாபேட்டை அடுத்த தென் கடப்பந்தங்கள் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் வருண் (24) இவர் சென்னை சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வரும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி தீடீரென தன் வீட்டிலேயே மண்ணெண்னையை தனக்கு தானே மேலே ஊற்றிக் கொண்டு தீயை பற்ற வைத்துக் கொண்டார். 

இதில் பலத்த தீக்காயம் அடைந்த வருணை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அனுமதித்தனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

போலீசார் விசாரணையில் பட்டதாரி வாலிபரான வருண் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் தந்தை தன்ராஜ் கண்டித்ததாலும் மேலும் வருண் வேலை செய்த இடத்தில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் தற்போது அந்த பெண் வருண் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த வருண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
Tags:    

Similar News