உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
பெருந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை ஈரோடுரோடு வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (75). இவரது மனைவி சுகந்தி.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை பரமசிவம் வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் மீண்டும் நேற்றுகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.
அதிலிருந்த 3பவுன் தங்கசெயின், அரைபவுன் எடையுள்ள 2ஜோடிகம்மல்கள், மற்றும் ரூ.7ஆயிரம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது. இதன் மொத்தமதிப்பு ரூ-.52 ஆயிரம் ஆகும்.
உடனே பரமசிவம் இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார்செய்தார். புகாரின்பேரில் பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.